1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 16 ஜூன் 2023 (14:51 IST)

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையை கண்காணிக்க எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு..!

delhi aiims
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடலை கண்காணிக்க 5 எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
 
அதன் பின்னர் அவர் நேற்று சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலையை கண்காணிக்க இருதய சிகிச்சை நிபுணர்களுடன் கூடிய 5 எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்த தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த மருத்துவர் குழு காவேரி மருத்துவமனை சென்று செந்தில் பாலாஜியின் உடலை கண்காணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva