வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (16:14 IST)

மீனவர்கள் வங்கக்கடல் ஒட்டிய பகுதிகளுக்கு செல்லவேண்டாம் - வானிலை மையம் எச்சரிக்கை !

தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில், திருச்சி, பெரம்பலூர், மதுரை, சேலம், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு சென்னையை பொருத்தவரை நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கடலோரம் மற்றும் அதன் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்  சென்னையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், 40-50 கி.மீ. வேகத்தில் காற்று வீசுக் கொண்டிருப்பதால்,  ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதிக்கும், மேற்வங்க மாநிலம, ஒடிசாவையொட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.