1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (00:31 IST)

மகன் மனநிலை சரியில்லாததால் தந்தை தற்கொலை செய்துகொண்ட அவலம்

மகனுக்கு மனநிலை சரியில்லாததால் வாழ்க்கையில் விரக்தியடைந்த தந்தைவிஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
 

 
தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் அருகே உள்ள பெரியநத்தம் கிராமம் மேலத்தெருவை சேர்ந்த ராமர் (50). பூ வியாபாரி, இவரது மனைவி ராமலட்சுமி. இவர்களது மகன் முனீஸ்வரன். இவர் மூளை வளர்ச்சி குறைந்தவர்.
 
பெற்றோர்கள் பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் முனீஸ்வரனுக்கு குணமாகததால் ராமர் மனவேதனை அடைந்தார். வாழ்க்கையில் விரக்தியடைந்து திங்களன்று விஷம் குடித்தார்.
 
உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமர் இறந்தார். இது குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.