வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 23 நவம்பர் 2022 (15:28 IST)

தாம்பரம் அருகே அடுத்தடுத்து மின்சார ரயில்கள் நிறுத்தம்: பயணிகள் அவதி

Chennai Train
தாம்பரம் அருகே சென்னை நோக்கி வர வேண்டிய ரயில்கள் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அவதியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
சென்னையின் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றான மின்சார ரயில் மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது என்றும் சரியான நேரத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு மற்றும் அலுவலத்திற்கு வருவதற்கு மின்சார ரயிலை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாம்பரத்தில் புறநகர் ரயில்சேவை ஒரு மணி நேரமாக பாதிப்படைந்து உள்ளதாக தெரிகிறது. 
 
உயர்மின் அழுத்தக் கம்பி உடன் இணையும் பகுதி பழுதானதால் தாம்பரம் சானிடோரியம் இடையே மின்சார ரயில் ஒரு மணி நேரமாக அடுத்தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் ரயில்கள் அடுத்தடுத்து செல்ல முடியாமல் இருப்பதால் பயணிகள் அவதியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன
 
Edited by Mahendran