1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: சனி, 5 அக்டோபர் 2019 (16:20 IST)

குடி போதையில் மோட்டார் வாகனத்தை கொளுத்திய இளைஞர்..

இளைஞர் ஒருவர் மது போதையில் நடுரோட்டில், தனது மோட்டார் வாகனத்தை கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் தாமோதர நகர் அருகில் உள்ள வண்ணார் 3 ஆவது தெருவை சேர்ந்தவர் வேலுமயில், இவர் பிளம்பர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இவரது மனைவியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மது அருந்திய வேலுமயில், தனது மோட்டார் பைக்கை எடுத்துகொண்டு தாமோதரநகர் பீங்கான் ஆஃபீஸ் சந்திப்பில் நடுரோட்டில் வைத்து தனது மோட்டோர் வாகனத்தை தீவைத்து கொளுத்திவிட்டு சென்றுவிட்டார். பின்பு குபு குபுவென எரிந்த தீயை அங்கிருந்த பலரும் சேர்ந்து தண்ணீரை ஊற்றி அனைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.