செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Modified: ஞாயிறு, 27 மார்ச் 2022 (00:16 IST)

கரூர் அருகே வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் ஆபத்து கண்டுகொள்ளுமா ? மாவட்ட நிர்வாகம் ?

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,  புகழூர் வட்டம்,  வேலாயுதம்பாளையம்,  பாலத்துரையிலிருந்து, சேலம் -தேசிய நெடுஞ்சாலை இணைக்கும் சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடையில் எந்த ஒரு அடையாளமும். அதாவது வேகத்தடையின் மீது ஒளிரும் பெயிண்ட்டுகள் எதுவும் இல்லாமலும்,  அறிவிப்பு பதாகையும்  இல்லாமல் இருப்பதால் விபத்துக்கள் மற்றும் அதன்மூலம் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே முன் கூட்டியே  மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்படுமா ??? என்று சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
கரூர் மாவட்டம் புகலூர் வட்டம் வேலாயுதம் பாளையம் பாலத்துரையிலிருந்து சேலம் -தேசிய நெடுஞ்சாலை இனைக்கும் சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடையில் எந்த ஒரு அடையாளமும். அறிவிப்பு பதாகை இல்லாமல் இருப்பதால் விபத்துக்கள் மற்றும் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது நடவடிக்கை எடுக்கப்படுமா???