தொடர்புடைய செய்திகள்
- டாஸ்மாக் கூட்டத்தைக் கட்டுபடுத்தலாம்… ஆனால் கோயில்களில் முடியாது – அமைச்சர் சேகர் பாபு!
- இளம் நடிகருக்கு வில்லியாகும் சிம்ரன் - எதிர்பார்ப்பை எகிற வைக்கும் புதுப்படம்!
- ஜூலை மாதம் முடியும் வலிமை படப்பிடிப்பு… கடைசியாக கிடைத்த அப்டேட்!
- பிரபாகரனின் ஆரம்பகால வாழ்க்கையை சொல்லும் மேதகு… ஓடிடியில் ரிலிஸ்!
- ஜூலை 31க்குள் +2 ரிசல்ட்.. மதிப்பெண் வழங்குவது எப்படி? – காத்திருப்பில் மாணவர்கள்
உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகிறதா திமுக? நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடக்க உள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஆட்சியில் நிர்வாக வசதிக்காக 9 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் 15க்குள் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலும் கூட கிராமப்புற பகுதிகளுக்கு நடந்தன. ஆனால் இன்னும் மாநகராட்சி பகுதிகளுக்கு நடத்தப்படவில்லை.
இந்நிலையில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படலாம் என சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக திமுகவும் தேர்தலுக்கு தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நாளை திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூட்டியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
