1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (13:59 IST)

தாசில்தாரை மு.க.அழகிரி தாக்கிய வழக்கு: நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

தேர்தல் பிரச்சாரத்தின் போது தாசில்தாரை முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 
 
கட்ந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு க ஸ்டாலின் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது தாசில்தாரை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 
 
இந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் நடந்த நிலையில் அரசு தரப்பு எதிர் தரப்பு என இரு தரப்பு வாதங்கள் நிறைவு செய்யப்பட்ட நிலையில் இன்று வழங்கப்பட்டது.
 
இந்த தீர்ப்பில் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி உள்பட 17 பேர் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
Edited by Mahendran