1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (15:22 IST)

கலப்பு திருமணம் செய்தவர்களிடம் வரி வாங்க மறுப்பு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

court
கலப்பு திருமணம் செய்ததால் ஊரு திருவிழாவில் வரிவாங்க தங்களிடம் மறுப்பதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் இந்த மனு மீது நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நல்லூர் கிராமத்தில் கலப்பு திருமணம் செய்த 25 குடும்பங்கள் இடம் இருந்து திருவிழா வரிவசூல் செய்யவும் திருவிழாவில் கலந்து கொள்ளவும் அனுமதி மறுக்கப்பட்டது
 
இதனை அடுத்து 25 குடும்பங்கள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்த போது கலப்புத் திருமணம் செய்துகொண்டதால் கோயில் திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கின்றனர் என்றும் வழங்க மறுக்கின்றனர் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்
 
இதனை அடுத்து கலப்புத் திருமணம் செய்த 25 குடும்பங்கள் இடமிருந்து வரிவசூல் செய்யவும் திருவிழாவில் அவர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது