1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 15 ஜூன் 2023 (12:30 IST)

டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு: அண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு..!

TR Balu
முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர் பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக அண்ணாமலைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை DMK Files' என்ற பெயரில் திமுக பிரபலங்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். 
 
இந்த நிலையில் தன்னுடைய பெயரை சொத்து பட்டியலில் சேர்த்ததை அடுத்து திமுக பொருளாளர் டிஆர் பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். 
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஜூலை 14ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 
 
கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி DMK Files'  என்ற பெயரில் அண்ணாமலை பேசியதற்கு எதிரான ஒரு வழக்கில் அவர் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran