தொடர்புடைய செய்திகள்
- கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் இருவர் கைது!
- சொத்து வரி உயர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
- டிரைவருக்கு திடீர் வலிப்பு; 5 பைக்குகளை அடிச்சு தூக்கிய பஸ்! – கிருஷ்ணகிரியில் கோர விபத்து!
- அன்னூரில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது- தமிழ்நாடு அரசு
- நடமாடும் காய்கனி அங்காடிகளை கொடியசைத்து தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்
பேருந்து விபத்தில் சிக்கிய தம்பதியர்; 100 மீட்டர் இழுத்து செல்லப்பட்டு பலி!
கோவை மாவட்டத்தில் சைக்கிளில் சென்ற தம்பதியர் பேருந்து மோதி இழுத்து செல்லப்பட்டு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி தேவி. இருவரும் பூலுவப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக தூய்மை பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
நேற்று காலை இருவரும் காலை 6 மணியளவில் சைக்கிளில் வேலைக்கு சென்றுக் கொண்டிருந்துள்ளனர். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து மோதியதில் தவறி கீழே விழுந்துள்ளனர். அவர்கள் மீது பேருந்து ஏறியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்களது உடல் பேருந்தில் சிக்கி சில மீட்டர்கள் இழுத்து செல்லப்பட்ட நிலையில் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தம்பதியர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அரசு பேருந்து டிரைவர் சரணடைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit By Prasanth.K
அடுத்த கட்டுரையில்
