1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 19 ஜூன் 2023 (07:57 IST)

சென்னையின் முக்கிய சாலைகளில் மழைநீர்.. நீரை வெளியேற்ற மாநகராட்சி ஊழியர்கள் தீவிரம்

சென்னை அண்ணா சாலை உள்பட முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதை அடுத்து அந்த நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னை உள்பட பல மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு சுமார் 10 மணிக்கு தொடங்கி மழை இன்னும் பெய்து வருகிறது என்பதும் இதனால் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் கடும் அவஸ்தையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
வாரத்தின் முதல் நாள் என்பதால் அலுவலகம் மற்றும் கல்லூரிக்கு செல்லும் செல்பவர்கள் சாலைகளில் வாகனங்களில் செல்ல முடியாமல் திணறி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை அண்ணா சாலையில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக உள்ளனர்.
 
மேலும் சுரங்க பாலங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  தாம்பரம் மாநகராட்சி சுரங்க பாலங்களில் அதிகாலை 2.30 மணி முதல் ஊழியர்கள் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva