வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: சனி, 16 மே 2020 (20:11 IST)

சென்னையில் இன்று ஒரே நாளில் 322 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

தமிழகத்தில் இன்று மேலும் 477 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுது செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவ்வால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,585 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 74 ஆகவும்,  குணமடைந்தோரிஹ்ன் எண்ணிகை 3,538 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 3,13, 639 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 6970 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இன்று சென்னையில் மட்டும் ஒரே நாலில் 332 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையி மொத்த பாதிபு 6,271 ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்