1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 5 பிப்ரவரி 2022 (13:01 IST)

கனிசமாக உயர்ந்த பாதிப்பு எண்ணிக்கை - புதுச்சேரி நிலவரம்!

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 
புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக கொரோனோ தாக்கம் குறைந்து வருகிறது. இதனால் அங்கு கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆம், கல்வி நிறுவனங்களை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவகங்களில் 100% வாடிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
 
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 224, காரைக்காலில் 74, ஏனாமில் 39, மாஹேவில் 7 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. புதுச்சேரியில் 4,630 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.