1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 19 அக்டோபர் 2021 (12:44 IST)

புதுச்சேரியில் மேலும் 55 பேருக்கு கொரோனா உறுதி

புதுச்சேரியில் மேலும் 55 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் எண்ணிக்கை 1,27,479ஆக உயர்ந்துள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.      
 
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வர தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இந்நிலையில், புதுச்சேரியில் மேலும் 55 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் எண்ணிக்கை 1,27,479ஆக உயர்ந்துள்ளது. தொற்று உறுதியான 490 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் இதுவரை 1,852 பேர் உயிரிழந்துள்ளனர்.