1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 11 மே 2022 (13:32 IST)

பொங்கலில் கரப்பான் பூச்சி... சிக்கலில் பிரபல ஹோட்டல்!

கடலூரிலுள்ள ஒரு பிரபல ஹோட்டலில் பொங்கலில் கரப்பான்பூச்சி, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு. 

 
கடலூரில் செயல்படும் பிரபல உணவகத்தில் பொங்கல் ஒன்று பார்சல் வாங்கிச் சென்ற வீட்டில் திறந்து பார்த்த போது அதில் கரப்பான்பூச்சி இருப்பது தெரியவந்தது. இது குறித்து மீண்டும் ஹோட்டலில் வந்து கேட்டதற்கு சரியான பதில் கூறவில்லை. மாறாக உணவு வாங்கிய தொகையை அவரிடம் திருப்பிக் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
 
இதனால் இது சம்பந்தமாக புகைப்படத்தை அவர் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். இதன் அடிப்படையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தவறு நடந்தது உண்மை தான் என உணவகம் ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்துள்ளது.
 
மேலும் இதுகுறித்து முறையாக பிரபல உணவகத்திற்கு நோட்டீஸ் வழங்கி விளக்கம் கேட்க உள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.