ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (18:03 IST)

2 வாரங்களில் 3வது முறை: பிரதமருக்கு வேதனையுடன் கடிதம் எழுதிய தமிழக முதல்வர்!

இரண்டு வாரங்களில் மூன்றாவது முறையாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள் என்றும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினர் தாக்கப்பட்டு கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
இலங்கை கடற்படை கடந்த சில நாட்களாக தமிழக மீனவர்களை தாக்கி கைது செய்து வரும் நிலையில் இன்றும் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
 
இந்த நிலையில் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் மீண்டும் மீண்டும் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்
 
தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது இரண்டு வாரங்களில் இது 3வது நிகழ்வாகும் என்றும் அவர் வேதனையுடன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்