1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 25 ஜூலை 2022 (18:15 IST)

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது: முதல்வர் ஸ்டாலின் கடிதம்

stalin
இலங்கை நாடு ஒரு பக்கம் பொருளாதாரச் சிக்கலில் இருந்த போதிலும் இன்னொரு பக்கம் தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்து வருகிறது
 
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில் இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்
 
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்
 
மேலும் மீன்பிடி படகுகளின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்