வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 15 நவம்பர் 2022 (13:21 IST)

அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வலுத்தப்படுத்தப்படும்: முதல்வர் ஸ்டாலின்

CM Stalin
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
இன்று சுகாதார மாநாட்டை தொடங்கி வைத்த முதலமைச்சர் முக ஸ்டாலின் மருத்துவமும் கல்வியும் அரசின் இருகண்கள் என தெரிவித்தார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பயன் பெற்றவர்களின் எண்ணிக்கை விரைவில் ஒரு கோடியை தொடும் என்று கூறிய முதல்வர் ஏழை மக்களின் நலன் காக்க கலைஞர் ஆட்சியில் ஏராளமான சுகாதார திட்டங்கள் கொண்டுவரப்பட்டன என்று தெரிவித்தார். 
 
விபத்தில் ஏற்பட்ட மனித உயிர் இழப்பை தடுக்க நம்மை காக்கும் 48 திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும் நோயை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க கலைஞர் வருமுன் காப்போம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு வருகிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்
 
Edited by Mahendran