ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 29 அக்டோபர் 2019 (10:28 IST)

விதிகளை மீறி பட்டாசு வெடித்த 115 பேர் மேல் வழக்கு – சென்னை போலிஸ் வழக்கு !

சென்னையில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 115 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்குப்  பட்டாசு வெடிக்கும் நேரமாக காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் தமிழக அரசு அனுமதியளித்திருந்தது. ஆனாலும் அந்த விதிகளை யாரும் பின்பற்றவில்லை. இதையடுத்து விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாகக் கூறி மொத்தமாக 115 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்குகளில் இவர்களின் விதிமீறலின் தன்மையைப் பொறுத்து 6 மாத சிறைத் தண்டனை அல்லது 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த வழக்கில் 700 பேர் வரைக் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.