1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 20 ஜனவரி 2022 (18:07 IST)

ஹரிநாடார் கைதை அடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? சென்னை காவல் ஆணையர்

நடிகை தற்கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிநாடார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார் 
 
தமிழ் நடிகை ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஹரிநாடார், சீமான் உள்பட ஒரு சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது 
 
இந்த நிலையில் பெங்களூரு சிறையில் மோசடி வழக்கு காரணமாக தண்டனை அனுபவித்து வந்த ஹரிநாடார் சென்னை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்
 
இந்த நிலையில் ஹரிநாடார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உள்ள நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது
 
இந்த விசாரணையின்போது அவர் கொடுக்கும் வாக்குமூலத்தை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்