1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 13 ஜூன் 2022 (20:58 IST)

சென்னை லாக்கப் மரணம்: மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு

Human Rights
சென்னையில் நடந்த லாக்கப் மரணம் குறித்து தாமாகவே முன்வந்து மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதியாக சென்ற ராஜசேகர் என்பவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். இது குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டு இருக்கும் நிலையில் இந்த மரணம் தொடர்பாக  மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. 
 
சென்னை மாநகர காவல் ஆணையர் இதுகுறித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மனித உரிமை ஆணைய தலைவர் எஸ்.பாஸ்கரன் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது/ ஏற்கனவே இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.