தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை!
- சென்னையை இன்னொரு வீடாக நான் நினைக்கிறேன் -எம்.எஸ்.தோனி
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் திருமணம்... ரசிகர்கள் வாழ்த்து
- கார்த்திக் கோபிநாத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி! – காவலில் எடுப்பது குறித்து விசாரணை!
- சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு நடத்த உத்தரவு
சென்னையில் மலர் கண்காட்சி - கட்டணம் நிர்ணயம்!
ஜூன் 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை 3 நாட்கள் மலர் கண்காட்சியை பார்வையிட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வருகிற ஜூன் 3 ஆம் தேதி கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு சென்னையில் மலர் கண்காட்சிக்கு அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலைவாணர் அரங்கில் முதல் முறையாக தோட்டக்கலைத் துறை சார்பில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.
ஆம், ஜூன் 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை 3 நாட்கள் மலர் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இந்த மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார் வேளாந்துறை அமைச்சர் எம்.ஏர்.கே. பன்னீர் செல்வவம். மலர் கண்காட்சியை பார்வையிட பொது மக்களுக்கு காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி வழங்கபப்ட்டுள்ளது. நுழைவு கட்டணமாக மாணவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு ரூ.20, பெரியவர்களுக்கு ரூ.50 ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் மலர் கண்காட்சிக்காக ஊட்டி, ஓசூர், திண்டுக்கல், பெங்களூரு, புனேவில் போன்ற இடங்களில் இருந்து மலர்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
