1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (15:11 IST)

2021-22 நிதியாண்டில் ரூ.1,240 கோடி வரி வசூல்: சென்னை மாநகராட்சி தகவல்!

2021-22 நிதியாண்டில் ரூ.1,240 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது என்றும், இது கடந்த ஆண்டை விட  35% கூடுதலாக வரி வசூலாகியுள்ளது என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 
2021-22 நிதியாண்டில் சொத்துவரி ரூ.778 கோடியும், தொழில்வரி ரூ.462 கோடி வசூலானதாக கூறிய சென்னை மாநகராட்சி  2020-2021 நிதியாண்டில் சொத்துவரி ரூ.470 கோடியும் தொழில்வரி ரூ.447 கோடியும் வசூலானதாக தெரிவித்துள்ளது.
 
மேலும் இன்னும் வசூலிக்க வேண்டிய நிலுவையில் உள்ள வரி மொத்தம் ரூ.230கோடி என்றும்,  2022-23ம் நிதியாண்டில் ரூ.1,500 கோடி வரி வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.