சென்னையில் 1,158 தெருக்களில் கொரோனா! – அதிர்ச்சியளிக்கும் நிலவரம்!

Written By Prasanth Karthick
Updated: செவ்வாய், 4 ஜனவரி 2022 (13:16 IST)
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் சென்னையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருக்களில் கொரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஒமிக்ரான் மற்றும் டெல்டா வகை கொரோனா வைரஸ்கள் பரவல் அதிகரித்துள்ள நிலையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்புகள் குறித்து தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி, சென்னையில் உள்ள 1,158 தெருக்களில் கொரோனா உள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தேனாம்பேட்டையில் தொற்று அதிகமாக உள்ளது. தேனாம்பேட்டையில் 228 தெருக்களில் கொரோனா பாதிப்பு உள்ளது. 988 தெருக்களில் 3க்கும் குறைவானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,482 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எல்லாம் காட்டு

விசா இல்லாமல் தாய்லாந்து செல்லும் இந்தியர்களுக்கு திடீர் கட்டுப்பாடு... சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி...

தமிழக முதல்வர் - கேரள முதல்வர் இன்று சந்திப்பு.. இருமாநில நலன் குறித்து ஆலோசனை...

விஜய் ஆட்சியில் தமிழகத்திற்கு வரும் 2 கொரிய நிறுவனங்கள்.. தொழிற்சாலை அமைக்க 30 ஏக்கர் நிலம் வழங்கும் தமிழக அரசு...

தி.நகர் போல் மாற போகும் பெரம்பூர்.. முதல்வர் விஜய் தொகுதியில் ரூ.15 கோடி திட்டம்...

சென்னை - திருச்சி இனி 3 மணி நேரம் தான்.. வருகிறது பசுமைவழிச் சாலை.. கிளாம்பாக்கம் - மஹிந்திரா சிட்டி வரை மேம்பாலம்..

அடுத்த கட்டுரையில்
Show comments