1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 4 ஜூலை 2023 (09:36 IST)

சென்னை - பெங்களூரு சதாப்தி ரயில் இனி இந்த ஸ்டேஷனில் நிற்கும்: அமைச்சர் எல்.முருகன்

Train
சென்னை பெங்களூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் இனி ஜோலார்பேட்டையில் நிற்கும் என மத்திய அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
 
வாரத்தின் ஆறு நாட்கள் இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை மற்றும் பெங்களூர் இடையே பயணம் செய்து வருகிறது என்பதும் பயணிகளின் பெறும் ஆதரவை இந்த ரயில் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த ரயில் ஜோலார்பேட்டையில் நிற்க வேண்டும் என பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்த நிலையில் இந்த கோரிக்கைக்கு ரயில்வே வாரியம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. 
 
இதனை அடுத்து ஜூன் ஜூலை 9ஆம் தேதி முதல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்பேட்டையில் நிற்கும் என்றும் தொடக்க விழாவை அமைச்சர் எல் முருகன் தொடங்கி வைக்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 
 
சென்னை பெங்களூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் காலை 7 49 மணிக்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நிற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva