வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக தமிழகத்தில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை ஜனவரியில் முடிந்துவிட்ட நிலையில் தமிழக மாவட்டங்களில் குளிர் மற்றும் வறண்ட வானிலை நிலவி வந்தது. வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக டெல்டா மாவட்டங்கள் உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் பல பகுதிகளிலும் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.
இந்நிலையில் இன்றும் சில பகுதிகளில் லேசான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K