1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 25 மே 2021 (12:08 IST)

100 குப்பி கருப்பு பூஞ்சை மருந்து … தமிழகத்துக்கு வழங்கல்!

தமிழகத்துக்குள் பரவி வரும் கருப்பு பூஞ்சை தொற்றுக்கான மருந்துகள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து இன்னும் மக்கள் விடுபடாத நிலையில் அடுத்ததாக கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, என இரண்டு புதிய நோய்கள் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சையால் நாடு முழுவதும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இந்த தொற்று இப்போது தமிழகத்திலும் இந்த தொற்று பரவல் அதிகமாகி வருவதால் அதற்கான மருந்துகள் ஆம்போடெரிசின் - பி  100 குப்பியை மத்திய அரசு தமிழகத்துக்கு அனுப்பியுள்ளது. ஏற்கனவே தமிழக மருத்துவப் பணிகள் கழகம் 5000 குப்பிகளை ஒதுக்கீடு செய்தது குறிப்பிடத்தக்கது.