Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்டெய்னரோடு செல்போன்கள் கொள்ளை! – ஹாலிவுட் பட லெவலில் தொடரும் கொள்ளை சம்பவங்கள்!

Written By Prasanth Karthick
Updated: புதன், 21 அக்டோபர் 2020 (13:06 IST)
சென்னையில் இருந்து செல்போன்கள் ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த பூந்தமல்லியிலிருந்து செல்போன்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று மும்பை நோக்கி புறப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் ஓசூர் அருகே லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுனர் மற்றும் உதவியாளர் உபாதை கழித்த நேரத்தில் அவர்களை சுற்றி வளைத்த கும்பல் அவர்களை தாக்கி விட்டு கண்டெய்னர் லாரியை திருடி சென்றுள்ளனர். பிறகு அதிலிருந்த செல்போன்களை வேறு கண்டெய்னர் லாரிகளுக்கு மாற்றி எடுத்துக் கொண்டு தப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த ஓட்டுனர் மற்றும் உதவியாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீஸார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட செல்போன்கள் மொத்தமாக ரூ.15 கோடி மதிப்புடையது.

முன்னதாக இதே போன்று செல்போன் கண்டெய்னர் ஆந்திர மாநிலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்த நிலையில் தற்போது சென்னையிலும் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

காதல் தோல்வி!.. போலீஸ் நம்ப மாட்றாங்க!.. விஜயை திரும்பி பார்க்க வைத்த எம்.எல்.ஏ!...

முதல்வர் விஜய் அறிவித்த மகப்பேறு விடுப்பு திட்டம்.. கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு...

9 மாதங்களுக்கு பின் மனைவி, சகோதரியை பார்த்த இம்ரான்கான்.. கட்சி தொண்டர்கள் நிம்மதி..

மாணவர் போராட்டம் எதிரொலி: திரும்ப பெறப்பட்ட கல்லூரி கல்வி ஆணையர் சுற்றறிக்கை..

தவெக எவ்ளோ நாள்னு பார்ப்போம்!.. கொந்தளித்த எடப்பாடி பழனிச்சாமி..

அடுத்த கட்டுரையில்
Show comments