1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 5 மார்ச் 2024 (18:32 IST)

சென்னையில் மருந்தகங்களில் சிசிடிவி கட்டாயம்..! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..!!

cctv camera
சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.
 
தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் மருந்தகங்களில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர்  ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.
 
இன்று முதல் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

 
மருத்துவர்களின் பரிந்துரை இல்லாத மாத்திரைகளை விற்பனை செய்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர்  ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.