1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 24 பிப்ரவரி 2019 (09:28 IST)

வங்கிகளில் பிடித்தம் செய்யும் தொகை திரும்ப அளிக்கப்படும் - ப.சிதம்பரம் உறுதி

வங்கிக் கணக்குகளில் மினிமம் பேல்ன்ஸ் இல்லை எனக்கூறி வாடிகையாளர்களிடம் தொடர்ந்து பிடித்தம் செய்யப்படும் தொகை அனைத்தும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் திரும்ப அவரவர் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் என்று காங்கிரஸ் தலைவர்  ப. சிதம்பரம் வாக்குறுதி அளித்திருந்தார்.
திருப்பூர் ராயபுரத்தில் உள்ள ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற கங்கிரஸ் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய சிதம்பரம் கூறியதாவது:
 
பணமதிப்பிழப்பு,நடவடிக்கை , ஜிஎஸ்டி நடைமுறையால் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.50000 சிறுகுறு தொழில்கள் முடங்கிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும் அதிமுக- பாமக இடையேயான  கூட்டணி  குறித்தும் கடுமையாக விமர்சித்தார்.