1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 18 செப்டம்பர் 2023 (15:09 IST)

அண்ணாமலை ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெற முடியுமா? ஜெயக்குமார்

அடுத்தாண்டு  பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கு இந்தியா முழுவதும் உள்ள கட்சிகள்  கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி என்ற பெயரிட்டு தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர்.

அதேபோல், பாஜக தலைமையிலான பல கட்சிகள் இணைந்துள்ளனர். சமீபத்தில் இக்கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். சமீபத்தில், அமித்ஷாவுடன் அவர் தொகுதிகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த நிலையில் அதிமுக – பாஜக கூட்டணியில் கருத்து மோதல்கள் அதிகரித்து வந்த நிலையில், பாஜக கட்சி தலைவர்களுக்கும், அதிமுக தலைவர்களுக்கும் இடையே வார்த்தை மோதல்கள் நீடித்து வந்தன.

இந்த நிலையில்,  இன்று செய்தியாளர்களுகு பேட்டியளித்த ஜெயக்குமார், ''பாஜக உடன் அதிமுக கூட்டணியில் இல்லை.  தேர்தல் வரும்போதுதான் அடை டிசைட் செய்ய  முடியும். அதிமுக தலைவர்களை  பற்றி அண்ணாமலை பேசினால் தக்க விளைவுகளை சந்திக்க  நேரிடும்; தனித்துப் போட்டியிட்டால் நோட்டா ஓட்டு கூட வாங்க மாட்டார் அண்ணாமலை. அவருக்கு தகுதிக்கு மீறி பதவி வழங்கப்பட்டுள்ளது.தன்னை முன்னிலைப்படுத்தி, தலைவர்களை அசிங்கப்படுத்துகிறார். பலமுறை எச்சரித்தும் அலட்சியப்படுத்துகிறார்'' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ''அண்ணாமலை , தனியாக ஒரு தொகுதியில் நின்று வெற்றி  பெற முடியுமா? நோட்டாவுக்கு கீழேதான் வாக்கு பெறுவார்…பிஜேபியால் காலூன்ற முடியாது இங்கு... வரும் 2024 தேர்தலில்  பாஜக எங்களுக்கு வேஸ்ட் லக்கேஜ் என்று கடுமையான விமர்சித்துள்ளார்.