வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 9 டிசம்பர் 2022 (15:17 IST)

சென்னையில் இன்று இரவு பேருந்துகள் இயங்காது - மாநகர போக்குவரத்து கழகம்

bus
கரையை  நோக்கி வரும் மாண்டஸ் புயல் சக்திவாய்ந்த புயலாக  நெருங்கி வரும் நிலையில்,இன்றிரவு  பேருந்துகளும் இயங்காது என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே இன்று இரவைக் கரையைக் கடக்க உள்ளது. எனவே, புயல் கரையைக் கடப்பதற்கு முன்பு 2 மணி நேரமும்,அதன் பின் 2 மணி நேரமும், கிழக்கு கடற்கரைச்சாலை, மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில்  4மணி நேரம் பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்படும் என்று தகவல் வெளியானது.

இந்த நிலையில், மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்னை மாநகர பேருந்து போக்குவரத்து கழக பேருந்துகள் இன்றிரவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது,

சென்னையில் மட்டும் இரவில் 550 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், இன்றிரவு அனைத்துப் பேருந்துகளும் இயங்காது என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

Edited By Sinoj