1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 14 பிப்ரவரி 2024 (12:56 IST)

குதிரையில் வந்த பட்டியலின மணமகன்.. சரமாரியான தாக்குதலால் பரபரப்பு.. 4 பேர் கைது..!

பட்டியல் இனத்தைச் சேர்ந்த மணமகன் ஒருவர் குதிரையில் வந்த நிலையில் அவரை உயர்சாதியினர் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் பட்டியல் இன மணமகன் ஒருவர் ஊர்வலமாக குதிரையில் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அந்த வழியாக வந்த உயர் சாதியினர் பட்டியல் இன மணமகனை சரமாரியாக தாக்கி உள்ளனர்.

எங்கள் சமூகத்தைச் சேர்ந்த மணமகன்கள் மட்டுமே குதிரையில் ஊர்வலமாக வரவேண்டும் என்றும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் குதிரையில் வரக்கூடாது என்று அவர்கள் மணமகனை குதிரையிலிருந்து இறக்கி கன்னத்தில் அடித்ததாக தெரிகிறது.

இதனால் மணமகன் அதன்பின் 4 வாகன சக்கரத்தில் அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் பட்டியல் இன மணமகனை தாக்கிய நான்கு பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva