1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (14:23 IST)

பாலிஷ் போடுவதாக சொல்லி தங்க நகையை ஏமாற்றிய வட இந்திய இளைஞன் – தர்ம அடி கொடுத்த மக்கள் !

ராஜபாளையம் ஆணையூர்  தெருவில் பாலிஷ் போடுவது போல தங்க செயினைத் திருட முயன்ற இளைஞனைப் பொதுமக்கள் அடித்து போலிஸிடம் ஒப்படைத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆணையூர் தெருவில் உள்ள ராஜேஸ்வரி என்பவரிடம் கொலுசு ஒன்றைப் பாலிஷ் போட கொடுத்துள்ளார். அதை செய்து கொடுத்த அந்த இளைஞன் ராஜேஷ்வரியின் தங்க சங்கிலியிலும் அழுக்கு உள்ளது. அதையும் பாலிஷ் போட வேண்டும் என சொல்ல அவர் செயினைக் கொடுத்து கொலுசை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றுள்ளார்.

அப்போது அந்த இளைஞன் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். செயினைப் பறிகொடுத்த ராஜேஸ்வரி ராஜபாளையம் வடக்கு காவல் நிலைத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு வாரம் கடந்த நிலையில் அவரை வேறொரு பகுதியில் பார்த்த ராஜேஸ்வரி அந்தப் பகுதி மக்களிடம் சொல்ல எல்லோரும் சேர்ந்து அவரை அடித்து உதைத்து போலிஸிடம் ஒப்படைத்துள்ளனர்.

விசாரணையில் அவரின் பெயர் மண்ணு குமார் என்பதும் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.