பாரதிராஜாவின் முன்ஜாமீன் வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

திங்கள், 2 ஜூலை 2018 (20:50 IST)
சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் தேசத்துக்கு விரோதமாக பேசியதாகவும், இந்த போராட்டத்தின்போது போலீசாரை தாக்க தூண்டியதாகவும் இயக்குனர் பாரதிராஜா மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளின் அடிப்படையில் அவர் எந்த நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
 
இந்த நிலையில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு பாரதிராஜா மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தப்போது இயக்குநர் பாரதிராஜாவுக்கு 2 வழக்குகளில் நிபந்தனை முன்ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
 
இயக்குனர் பாரதிராஜா திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எல்லாம் காட்டு

திருச்செந்தூர் கோவிலில் லஞ்சம்!.. 2 காவலர்கள் டிஸ்மிஸ்!.. ஐயருக்கு பூஜை செய்ய தடை!...

லஞ்சம் வாங்கிய அர்ச்சகர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்த அமைச்சர் ரமேஷ்.. வெறும் மன்னிப்பு கடிதம் எல்லாம் கிடையாது...

தகுதியற்ற வேட்பாளர்களுக்கு வாரி வழங்கப்பட்ட வாய்ப்பு: காங்கிரஸ் தலைமை குறித்து ஜோதிமணி குற்றச்சாட்டு...

கவின் படுகொலைக்கு விஜய் ஏன் குரல் கொடுக்கலைன்னு கேட்டீங்களே.. குரல் கொடுக்குறது முக்கியம் அல்ல.. ஆக்சன் எடுக்குறதுதான் முக்கியம்...

மரண தண்டனையை தடுத்து நிறுத்திய மனித நேயம்!.. கேரள நபர் மீட்பு!...

அடுத்த கட்டுரையில்
Show comments