தொடர்புடைய செய்திகள்
- சிவசேனா கட்சி விவகாரம்.. இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு..!
- சிவசேனா கட்சி, சின்னம்.. உச்சநீதிமன்றம் செல்லும் உத்தவ் தாக்கரே..!
- சிவசேனா கட்சி பெயர், சின்னத்தைப் பெற ரூ.2,000 கோடிக்கு பேரமா?
- அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழை
- மகன் இறந்து விட்டால் தாய்க்கு சொத்தில் பங்கு இல்லை: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
பால்தாக்கரேவின் 11-ம் ஆண்டு நினைவு நாள்
சிவசேனா கட்சியை நிறுவிய பால்தாக்கரே அவர்களின் 11-ம் ஆண்டு நினைவு நாள் கரூர் மாவட்ட சிவசேனா சார்பில் அனுசரிக்கப்பட்டது.
சிவசேனா கட்சியை நிறுவிய பால்தாக்கரே அவர்களின் 11-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்தியா முழுவதும் ஆங்காங்கே அவரது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் பால்தாக்கரே அவர்களுக்கு கரூர் மாவட்ட சிவசேனா சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. கரூர் பேருந்துநிலையம் அருகே உள்ள காமராஜர் சிலை அருகில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட சிவசேனா மாவட்ட தலைவர் எம்.சரவணன் தலைமை வகித்தார்.
மேலும், மறைந்த பால்தாக்கரே அவர்களுக்கு மலர்களால் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி தலைவர் முரளி, மாவட்ட செயலாளர் ஆனந்த், கிழக்கு மாவட்ட செயலாளர் காமராஜ், கரூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் கரண், மாவட்ட பொருளாளர் செந்தில், மாவட்ட இளைஞரணி செயலாளர் திருப்பதி ராஜ், செயற்குழு உறுப்பினர்கள் ராஜ்குமார், கார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளாமனோர் கலந்து கொண்டு சிவசேனா கட்சியின் நிறுவனர் பால்தாக்கரேவின் திருவுருவப்பட்த்திற்கு மலர் மாலை அனிவித்து மலரஞ்சலி செலுத்தி வீர வணக்கம் செலுத்தினர்.
