வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 26 ஜூன் 2020 (23:44 IST)

மதுபோதையில்...காவல் ஆய்வாளரை கன்னத்தில் அறைந்த காவலர் !

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை காவல்நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பால சுப்பிரமணியம். இவரை உடன் பணியாற்றி வந்த முதல்நிலை காவலர் கன்னத்தில் அறைந்தாதல் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 9 ஆம் தேதி மது அருந்திவிட்டு வந்த  முதல்நிலை காவலர்  ஜாகிர் உசேன்,  புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை காவல்நிலைய உதவி ஆய்வாளர்   பாலசுப்பிரமணியன் உடன் வாக்குவாததில் ஈடுபட்டதுடன் அவரை மதுபோதையில் கன்னத்தில் அறைந்ததாகத் தெரிகிறது.

இதுகுறித்து பாலசுப்பிரமணியம் புகார் அளித்ததன்பேரில் , ஜாகிர் உசேன் உடனடியாக கைது செய்யப்பட்டார். இந்த பிரச்சனை தொடர்பால விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அந்த மாவட்ட எஸ்.பி. அருண் சக்தி குமார் ஜாகிர் உசேனை  பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.