1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 11 டிசம்பர் 2023 (12:55 IST)

'நீர்வழிப் படூஉம்' நாவலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!

neervazhi patuum novel
வருடம் தோறும் இந்திய மொழிகளில்   வெளியாகும் நூல்களில் சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும்.

மத்திய அரசின் இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது தமிழில் 'நீர் வழிபடுஉம்' நாவலுக்காக எழுத்தாளர் தேவி பாரதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டையைச் சேர்ந்த இவரது இயற்பெயர் ராஜசேகரன் (40வயது) . இவருக்கு தமிழிலகக்கிய எழுத்தாளர்கள் படைப்பாளிகள் எனப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்,

‘நொய்யல் மனிதர்களின் வாழ்வியலைத் தொன்மங்களின் துணையுடன் வரைந்து காட்டும் தம் எழுத்துநடையால் கவனம் பெற்ற எழுத்தாளர் ராஜசேகரன் #தேவிபாரதி அவர்களின் 'நீர்வழிப் படூஉம்' நாவல் சாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!’ என்று தெரிவித்துள்ளார்.

Appreciation of Chief Minister M.K.Stal for the novel 'Neerahip Baduum