தொடர்புடைய செய்திகள்
- ஓபிஎஸ் பக்கம் தீர்ப்பு... அவசர ஆலோசனையில் ஈபிஎஸ்!
- நட்பா? எதிரியா? என்பதை திமுக தான் முடிவு செய்ய வேண்டும்: நயினார் நாகேந்திரன்
- தர்மம் வென்றது... நீதி வென்றது.. சென்னை ஐகோர்ட் தீர்ப்பை அடுத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி!
- மீண்டும் தர்மயுத்தம் ஆரம்பம்? – ஜெயலலிதா நினைவிடம் புறப்பட்டார் ஓபிஎஸ்!
- அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது..! அதிர்ச்சியில் எடப்பாடியார் அணி! – நீதிமன்றம் தீர்ப்பு!
அதிமுக பிரச்சனையில் தலையிட்டு குளிர்காய விரும்பல – அப்பாவு!
அதிமுக உட்கட்சி பிரச்சிசனை, ஒன்னும் அவசர பொதுமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை அல்ல என சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு.
அதிமுக கட்சியில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே ஒற்றை தலைமை குறித்த மோதல் எழுந்த நிலையில் கடந்த ஜூலை 11ம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதை தொடர்ந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு எடப்பாடி பழனிசாமி நீக்கினார். ஆனால் இந்த பொதுக்குழு கூட்டம் கட்சி விதிகள்படி நடத்தப்படவில்லை என ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த இரண்டு நாட்களாக இந்த வழக்கு குறித்த விசாரணை நடைபெற்ற நிலையில் இன்று அதன் தீர்ப்புகள் வெளியாகியுள்ளது. அதன்படி ஜூலை 11ம் தேதி அதிமுக நடத்திய பொதுக்குழு கூட்டம் மற்றும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவை பொறுத்தவரை ஜூன் 23ம் தேதி நிலைமையே தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும், பொதுக்குழு கூட்டத்தை ஆண்டுக்கு ஒருமுறை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது
இந்நிலையில் அதிமுகவில் நடப்பது குறித்து சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளதாவது, அதிமுக உட்கட்சி பிரச்சிசனை, ஒன்னும் அவசர பொதுமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை அல்ல. சட்டமன்ற அதிமுக துணைத்தலைவர் என்ற விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது என எதிர்க்கட்சித் தலைவரே கூறியுள்ளார்.
சட்டப்பேரவை வேறு, நீதிமன்றம் வேறு. ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி கடிதங்கள் குறித்து, யார் மீதும் விருப்பு, வெறுப்பில்லாமல் ஜனநாயக முறையில் நடவடிக்கை இருக்கும். 4 பிரிவாக அதிமுகவினர் உள்ளனர். அவர்கள் பிரச்சனையில் தலையிட்டு குளிர்காய விரும்பவில்லை என்று கூறினார்.
