1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 13 ஜனவரி 2023 (22:41 IST)

கரூரில் புகையில்லா பொங்கல் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

karur
கரூர் மாவட்டம் புலியூர்(தேர்வுநிலை) பேரூராட்சி புகையில்லா பொங்கல் 2023 முன்னிட்டு நடைபெற்ற நடவடிக்கைகள் கரூர் மாவட்டம் புலியூர்(தேர்வுநிலை) பேரூராட்சியில் புகையில்லா பொங்கல் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில் பேரூராட்சி செயல் அலுவலர், பேரூராட்சி மன்ற தலைவர், பேரூராட்சி மன்ற துணை தலைவர், அனைத்து வார்டு கவுன்சிலர்கள், பேரூராட்சி பணியாளர்கள், பொது மக்கள்
தன்னார்வலர்கள் மற்றும் செட்டிநாடு பொறியியல் கல்லூரி மாணவர்கள் கலந்து
கொண்டனர் .
 
கரூர் மாவட்டம் புலியூர் (தேர்வுநிலை) பேரூராட்சி எம்.ஏ.எம் இராமசாமி செட்டியார் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் புகையில்லா பொங்கல் குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இதில் பேரூராட்சி செயல் அலுவலர், பள்ளி தலைமையாசிரியர், அனைத்து ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டார்கள்.
 
கரூர் மாவட்டம் புலியூர் (தேர்வுநிலை) பேரூராட்சி ஊராட்சி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் புகையில்லா பொங்கல் குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.
 
மற்றும் பேரூராட்சி சார்பாக புகையில்லா பொங்கல் விழா முன்னிட்டு பொங்கல் விழா
நடைபெற்றது. இதில் உதவி தொடக்க கல்வி அலுவலர், பேரூராட்சி செயல் அலுவலர், பேரூராட்சி பணியாளர்கள், பள்ளி தலைமையாசிரியர் அனைத்து ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டார்கள்.