வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 8 ஜனவரி 2021 (09:16 IST)

இதுதான் திமுக காத்த பெண்கள் மாண்பா? – உதயநிதியை வறுத்தெடுக்கும் அமமுக!

அமமுக பிரமுகர் சசிகலாவை இகழ்வாக பேசியதற்கு உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என சசிகலா சகோதரர் மகன் நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கூட்டம் ஒன்றில் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அமமுக பிரமுகர் சசிகலா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளதாக பரபரப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து டிடிவி தினகரன் உள்ளிட்டோர் ஏற்கனவே கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையில், சசிகலாவின் சகோதரர் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த், தனது அருவறுக்க்கத்தக்க பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலின் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அப்படி மன்னிப்பு கேட்காத பட்சத்தில் சட்டரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ள நிலையில், உதயநிதியையும், திமுகவையும் விமர்சித்து அமமுகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.