1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 12 மே 2022 (17:24 IST)

பீப் பிரியாணி விவகாரம் ; ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைப்பு!

biriyani
ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரியாணிக்கு புகழ்பெற்ற ஆம்பூரில் நாளை பிரியாணி திருவிழா தொடங்கி 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பிரியாணி திருவிழாவில் பல்வேறு வகையான பிரியாணிகளும் இடம்பெறும் நிலையில் பீப் பிரியாணி இடம்பெறாதது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி இடம்பெறாவிட்டால் பீப் பிரியாணி செய்து திருவிழா நடக்கும் மைதானத்தின் முன்னே அனைவருக்கும் இலவசமாக வழங்கி போராட்டம் நடத்தப்படும் என விசிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் மழை அறிவிப்பு காரணமாக ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.