1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 1 அக்டோபர் 2019 (17:29 IST)

உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடை கோரி ராதாபுரம் எம்.எல்.ஏ. மேல்முறையீடு..

ராதாபுரம் எம்.எல்.ஏ. இன்பதுரை வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மறுவாக்கு எண்ணிக்கையை நடத்த உத்தரவிட்ட நிலையில், அதற்கு எதிராக இன்பராஜ் மேல்முறையீடு செய்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டார் இன்பதுரை. அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவை சேர்ந்த அப்பாவு 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.  இதனை தொடர்ந்து 203 தபால் வாக்குகளை எண்ணாமல் தேர்தல் அதிகரிகள் நிராகரித்ததாக  அப்பாவு வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ராதாபுரம் தொகுதியில்  மறுவாக்கு எண்ணிக்கை நடத்துமாறு தேர்தல் அணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், 19,20,21 ஆகிய சுற்றுகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை அக்டோபர் 4 ஆம் தேதிக்குள்  சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிராக அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பதிலளித்த தேர்தல் ஆணையம் அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் சமர்மிப்பது கடினம் என்றும் பதிலளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.