வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (07:34 IST)

ஊருக்கு உபதேசம் செய்யும் உத்தமரா கமல்ஹாசன்? அதிமுக நாளேடு தாக்கு

ஊருக்கு உபதேசம் செய்யும் கமல்ஹாசன், தயாரிப்பாளரிடம் வாங்கிய பணத்தை கொடுக்காமலும், படம் நடித்து கொடுக்காமலும் ஏமாற்றி வருவதாக அதிமுக நாளேடு ஒன்று கடுமையாக விமர்சனம் செய்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் கூறியிருப்பதாவது:
 
 
ரூ.10 கோடியை வாங்கிக்‌ கொண்டு இருப்பி கொடுக்‌காமல்‌ ஏமாற்றுகிறார்‌ என நடிகர்‌ கமல்ஹாசன்‌ மீது பிரபல படத்‌ தயாரிப்பாளர்‌ திரைப்பட தயாரிப்பாளர்‌ சங்கத்தில்‌ புகார்‌ கொடுத்‌துள்ளார்‌. கமல்ஹாசன்‌ மீது காடுக்கப்பட்டுள்ள இந்த புகார்‌ தயாரிப்பாளர்‌ சங்‌கத்தில்‌ பெரும்‌ பாபரப்பை ரற்படுத்தி உள்ளது
 
 
நடிகர்‌ கமல்ஹாசன்‌ பெரிய உத்தமர்‌ போலன் தன்னை நினைத்துக்‌ கொண்டு ஊருக்கு உபதேசம்‌ செய்து வருகிறார். புதிதாக மக்கள்‌ நீதி மய்யம்‌ என்ற கட்சியை தொடங்கி கடந்த மக்களவை ேதர்தலில்‌ போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும்‌ டெபாசிட்‌ இழந்தார்‌. அப்போது அவர்‌ ஊருக்கு உபதேசம்‌ செய்து தான் பெரிய உத்தமர் போல்‌ மக்களிடையே பிரச்சாரம்‌ செய்தார்‌
 
 
இந்நிலையில்‌ அவர்‌ நடித்த உத்தம வில்லன்‌ என்ற படம்‌ பெரும்‌ நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதனால்‌ அவரை வைத்து வேறொரு புதிய படம்‌ தயாரிப்பதற்காக தயாரிப்பாளர்‌ ஞானவேல்‌ராஜா கமல்ஹாசனுக்கு 10 கோடி பணம்‌ முன் பணம் கொடுத்ததாகவும், அந்தபணத்தை வாங்கிக் கொண்டு அவர்‌ படத்தில்‌ நடித்து கொடுக்காமலும், பணத்தையும்‌ திருப்பி கொடுக்காமலும் ‌ஏமாற்றி வந்ததாக கூறப்பட்‌றது. 
 
 
பலமுறை ஞானவேல்‌ராஜா கமல்ஹாசனிடம்‌ பணத்தை இருப்பி கேட்டும் அவர்‌ கொடுக்காததால் ‌இது குறித்து தயார்பபாளார் சங்கத்தில்‌ புகார்‌ கொடுதஇருக்கிறார். ‌கமல்ஹாசன்‌ மீது தயாரிப்பாளர்‌ ஒருவர்‌ புகார் கொடுத்துள்ள இச்சம்வம் சினிமா வட்டாரத்தில் பெரும்‌ பரபரப்பை ஏறடுத்தி உள்ளது