கரூரில் ஆடிக்கழுவாடி திருவிழா
கரூரில் ஆடிக்கழுவாடி திருவிழா
கரூர் அருகே ஆடிக்கழுவாடி திருவிழா மற்றும் 1008 பால்குட அபிஷேக விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், குளிர்ந்தமலையில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ முனியப்பசுவாமி திருக்கோயிலில் ஆடிக்கழுவாடி திருவிழா மற்றும் 1008 பால்குட அபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
27 ஆம் ஆண்டாக நடைபெற்ற இந்த விழாவில் ஆடிக்கழுவாடி நாளான ஆடி மாதம் 32 ம் நாளை முன்னிட்டு காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் மற்றும் 1008 பால்குடம் எடுத்து வேலாயுதம்பாளையம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக கேரள செண்டைமேளம் முழங்க ஊர்வலமாக வந்து, அரிவாள் மீது குருசாமி ஒருவர் ஏறி நின்று அருள்வாக்கு கூறினார்.
அப்பகுதியின் முக்கிய சந்திப்புகளில் அரிவாள் மீது ஏறி நின்று பின்பு அருள்மிகு ஸ்ரீ முனியப்ப சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் அடுத்து அருள்மிகு ஸ்ரீ முனியப்ப சுவாமிக்கு தீர்த்த குடங்கள் மற்றும் பால்குடங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ முனியப்பசுவாமி அருள் பெற்றனர். இதற்கான முழு ஏற்பாடுகளை ஆடிக்கழுவாடி விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.