1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 5 ஜனவரி 2019 (16:54 IST)

பட்டுன்னு போட்ட பூச்சி: பொட்டுன்னு போவான்னு பாத்தா சவப்பெட்டியிலிருந்து எழுந்து அலப்பறை

ஒட்டன்சத்திரத்தில் மரணமடைந்துவிட்டதாக நினைத்த நபர் சவப்பெட்டியிலிருந்து எழுந்து பினாத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த தங்கவேலு என்பவர், மரத்தில் ஏறி தேங்காய் பறிக்கும் தொழில் செய்து வந்தார்.
 
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் ஒரு தென்னை மரத்தில் ஏறி, தேங்காய் பறித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த விஷவண்டு ஒன்று அவரை தாக்கியதில் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.
 
பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
 
இதனையடுத்து வீட்டிற்கு அவரது உடல் எடுத்துவரப்பட்டது. அவரது உடல் ஒரு ஃப்ரீசர் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. உறவினர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாரா விதமாய், சக்திவேல் திடீரென எழுந்து, என்னாச்சு நான் எப்படி இங்க வந்தேன் என கேள்வி எழுப்பினார். இதனால் அங்கிருந்தவர்கள் அலறிபோனார்கள். மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.