1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 27 ஜூலை 2018 (20:49 IST)

கருணாநிதியை பார்க்க திருக்குவளையில் இருந்து வந்த மூதாட்டி

திமுக தலைவர் கருணாநிதி அவர்களுக்கு சிறுநீரக தோற்றுநோய் காரணமாக காய்ச்சல் இருந்து வருவதாகவும், அவரது உடல்நிலை வயது மூப்பின் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளதாகவும் நேற்று அவருக்கு சிகிச்சை அளித்து அந்த தனியார் மருத்துவமனை அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது.
 
இதனையடுத்து கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டின் முன் நேற்று நள்ளிரவு முதல் திமுக தொண்டர்கள் குவியத்தொடங்கிவிட்டனர். அவர் ஒருமுறை வீட்டை விட்டு வெளியே வந்து கையை அசைப்பார் என்ற தருணத்திற்காக தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.
 

இந்த நிலையில் கருணாநிதியை சந்திக்க அவரது சொந்த ஊரான திருக்குவளையிலிருந்து மூதாட்டி ஒருவர் கோபாலபுரம் வந்துள்ளார். கருணாநிதியை ஒருமுறையாவது நேரில் சந்திக்க வேண்டும் என்று பலமணி நேரம் காத்திருப்பதாகவும், ஆனால் கருணாநிதியை பார்க்க முடியாத நிலை இருப்பதால் அவர் கண்ணீர் வடித்த காட்சி காண்போரை உருக்கும் வகையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.