டிவி, ஃபேனை தூக்கி போட்டு உடைத்து போராட்டம்.. அன்புமணி மீது வழக்குப்பதிவு..!

Mahendran
சனி, 20 ஜூலை 2024 (08:26 IST)
மின் கட்டண உயர்வை எதிர்த்து டிவி, ஃபேன், தொலைக்காட்சி ஆகியவற்றை தூக்கி போட்டு உடைக்கும் போராட்டம் நடத்தியதை அடுத்து அன்புமணி உள்பட பாமகவினர் மீது வழக்கு பதிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் தமிழக அரசு மின் கட்டண உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டது என்பதும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் இந்த மின் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது என்று கூறியது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் மின் கட்டண உயர்வுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் அன்புமணி உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர் என்பதும் திமுக கூட்டணி கட்சிகள் இது குறித்து வாயை திறக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து சென்னையில் இன்று பாமக நடத்திய போராட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். இந்த போராட்டத்தின் போது இலவச தொலைக்காட்சி மின்விசிறியை தூக்கி போட்டு உடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

இதனை அடுத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது சென்னை எழும்பூர் போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran
 
 

எல்லாம் காட்டு

அரசுக் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. முக்கிய அறிவிப்பு..!

ஒருவழியாக தமிழகத்திற்கு டிஜிபி நியமனம்.. ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால்.. யார் இவர்?

திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையின் அவலம்.. 2023ல் கட்டப்பட்ட பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து..!

என் குழந்தை கலைந்து போனதுக்கு விஜய் சார்தான் காரணம்!.. பிக்பாஸ் ஜூலி அழுகை!...

நீங்க டைம் எடுத்து கத்துக்கிற வரை தமிழ்நாடு தாங்காது சி.எம்.சார்!.. உதயநிதி கோபம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments