வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 11 மே 2020 (16:39 IST)

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
தமிழகத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் மிக அதிகமாகி வருகிறது. சென்னை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக உள்ளது
 
இந்த நிலையில் இன்று ஒரே நாளில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்ட மாவட்டத்தில் உள்ள பரங்கிமலையில் 44 பேர்களுக்கும், கூடுவாஞ்சேரியில் 23 பேர்களுக்கும், கேளம்பாக்கம் பகுதியில் 6 பேர்களுக்கும், அச்சிறுப்பாக்கம் பகுதியில் 4 பேர்களுக்கும், செங்கல்பட்டு பகுதியில் 3 பேர்களுக்கும் என மொத்தம் 91 பேர்கள் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். 
 
ஏற்கனவே செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் 267 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் கோயம்பேடு தொடர்புடையவர்கள் என்றும் கூறப்படுகிறது